பணிநேரத்தில் குறட்டை விட்டு தூங்கிய ரோந்து போலீசார் சஸ்பெண்ட்: சேலம் …

salem-police-2
சேலம் அருகே வாழப்பாடி சேசன்சாவடி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இன்று காலை போலீஸ் ரோந்து வாகனம் நின்று உள்ளது. என்னவா இருக்கும் என்று அருகில் இருந்த மக்கள் சென்று பார்த்து உள்ளனர். அங்கு சென்று பாரத்து பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

அங்கு இரவு ரோந்து பணியில் நிர்ணயிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மூவர், அங்கு உள்ள திண்ணையில் படுத்து ஹாயாக படுத்து குறட்டை விட்டு கொண்டே சட்ட ஒழுங்கை கனவில் காப்பற்றி கொண்டிருந்தனர், அதுவும் சிறுடைகளை கழற்றிவிட்டு லுங்கி கட்டியபடி வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

இதனைச் சிலர் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர, தற்போது வைரலாகப் பரவிவருகிறது. இதையடுத்து, அந்த மூன்று போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Leave a Response