மகாராஷ்டிர மாநிலத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
மகாராஷ்டிர மாநிலத்தின் சோலாப்பூர் வாடியில் உள்ள துதானி ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் ஒன்று திங்கட்கிழமை தடம் புரண்டது. இதில், ரயிலின் 5 பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து பிறண்டன.
நள்ளிரவில் நேர்ந்த விபத்து என்பதால் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இந்த விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே, துபானி ரயில் நிலையம் வழியாக செல்லும் ரயில்கள் இந்த விபத்து காரணாமாக மாற்று வழியில் இயக்கப்படுகின்றன.