வேலையின்றி தவிக்கும் 60 சதவீகித பொறியியல் பட்டதாரிகள்!

appollo
இந்தியாவில் 60 சதவீத பொறியியல் பட்டதாரிகள் வேலை இல்லாமல் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் முடிந்து வெளியே வரும் எட்டு லட்சம் பேரில் 60 சதவீதம் பேருக்கு வேலை கிடைப்பதில்லை. அதே போல் கோடை விடுமுறையில் 1 சதவீத மாணவர்கள் தான் இன்டர்ன்ஷிப்பில் பங்கேற்கின்றனர். இந்தியாவில் உள்ள 3,200 கல்வி நிறுவனங்களில் 15 சதவீதத்திற்கு மட்டுமே பொறியியல் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதனால் பொறியியல் கல்லூரி மற்றும் மாணவர்களின் தரம் இந்தியாவில் வெகுவாக குறைந்துள்ளது. அதனால் மருத்துவத்திற்கு நாடு முழுவதும் ஒரே தேர்வான நீட் தேர்வு வைப்பது போன்று, பொறியியலுக்கும் நீட்டி (NEETI) எனும் தேர்வினை 2018ஆம் ஆண்டு முதல் நடத்த மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இந்த தேர்வு வருடத்திற்கு மூன்று முறை நடைபெறும். டிசம்பர் 2017 – ஜனவரி 2018 காலகட்டத்தில், மார்ச் 2018 மற்றும் மே 2018 ஆகிய மூன்று மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. “நேஷனல் டெஸ்டிங் சர்வீஸ்” எனும் நிறுவனம் பொறியியல் தேர்வுகளை நடத்த உள்ளன. இந்த நிறுவனமே ஐஐடி தேர்வினையும் நடித்தும் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஐடி தேர்வுக்கான வினாத்தாள்களை ஐஐடி நிறுவனமே தயாரித்துக்கொள்ளும். தேர்வுகள் மட்டும் நேஷனல் டெஸ்டிங் சர்வீஸால் நடத்தப்பட உள்ளது. தொழில்நுட்ப கல்வியின் தரத்தை உயர்த்தி 75 சதவீத மாணவர்களுக்கு வேலை கிடைப்பதை உறுதி செய்ய அனைத்திந்திய தொழில் நுட்ப கல்வி மையம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

Leave a Response