யாருடைய பின்னணியில் பன்னீர் செல்வம் இயங்குகிறார்?. தம்பிதுரை.

thambi
யாரோ சிலரின் துாண்டுதலிலேயே பன்னீர் செயல்பட்டுக் கொண்டிக்கிருக்கிறார் என லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.சசிகலா தரப்பில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையிலான குழுவினர், நசீம் ஜைதியை நேற்று (மார்ச், 17) சந்தித்தனர். சந்திப்புக்கு பின், நிருபர்களின் கேள்விக்கு, தம்பிதுரை பதில் அளித்தார்.

பன்னீர்செல்வத்தை, பா.ஜ., இயக்குகிறதா அல்லது வேறு யாராவது இயக்குகின்றனரா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால், யாரோ சிலரின் துாண்டுதலிலேயே, அவர் இவ்வாறு
செயல்படுகிறார். கட்சியில் இருந்து பிரிந்து சென்ற, பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் திரும்ப வந்தால், அவர்களை ஏற்க தயாராக உள்ளோம் என்று அவர் கூறினார்.

தற்போது, சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்கிறது. அதன்பின், கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு, பொதுச் செயலர் தேர்ந்தெடுக்கப்படுவார். யாருடைய பின்னணியில் பன்னீர் செல்வம் தற்போது இயங்குகிறார் என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை வினா எழுப்பியுள்ளார்?…

Leave a Response