சினிமாவில் இப்போது ஒரு படம் நூறு நாட்களை தாண்டினாலே வெற்றிப்படமாகி விடுகிறது. இந்த நிலயில் “துருவங்கள் பதினாறு” படம் 75 நாட்களை கடந்து இன்னும் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
புதுமுக இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கிய இந்தப் படம் பத்திரிக்கையாளர்களிடையே பெருத்த பாராட்டைப் பெற்றது.ஷங்கர், கௌதம் மேனன் முதலிய முன்னனி இயக்குநர்கள் பலரும் இந்தப்படத்தை பாராட்டினார்கள் புதிய அலையை ஏற்படுத்திய இந்தப்படம் பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது.
இந்தப்படத்தின் வெற்றி விழாவில் பங்கேற்ற கௌதம் மேனன் இந்தப்படத்தை பார்த்த பிறகு நான் கார்த்திக் நரேன் ரசிகனாகிவிட்டேன். அவரது அடுத்த படத்தை நான் அவருடன் சேர்ந்து தயாரிக்கிறேன் என்றார்.
மொத்தப் படக்குழுவும் படத்தின் பத்திரிக்கையாளர்களிடம் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.