நீர்வரத்து அதிகரிக்கும் முல்லை பெரியாறு அணை!

mulla2
தமிழக, கேரள மக்களின் நீராதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணை தொடர் மழை காரணமாக முல்லை பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தேக்கடி, முல்லை பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தேக்கடியில் 18.4 செ.மீ.,ம், முல்லை பெரியாறு அணை பகுதியில் 16.6 செ.மீ.,ம் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு 281 கனஅடியில் இருந்து 643 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 109.80 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து தமிழகத்திற்கு 100 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

Leave a Response