தமிழக பெண் பக்தரிடம் திருமலை திருப்பதியில் தங்க நகை பறிப்பு..

tirupati-temple-edited
நேற்று முன்தினம் திருப்பதி கோயிலுக்கு சென்ற திருவண்ணாமலையை சேர்ந்த சாந்தம்மாள் அவரது குடும்பத்தினர் வந்தனர்.திருப்பதியில் தங்குவதற்கு விடுதிகள் தேடி பார்தனர் எங்கும் கிடைக்கததால் கோயில் எதிரே உள்ள வாகன மண்டபத்தில் சாந்தம்மாள், அவரது குடும்பத்தினர் தூங்கியிருகின்றனர்.

பின்னர் இவர்கள் நேற்று காலை எழுந்து பார்த்தபோது, சாந்தம்மாள் எழுந்திருக்கவில்லை. அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க செயினும் ரூ.500 ரொக்க பணமும் காணவில்லை. சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர், முகத்தில் தண்ணீர் தெளித்தனர்.

பிறகு சிறிது நேரத்துக்குப் பிறகு விழித்தார் சாந்தம்மாள். அருகில் படுத்திருந்த மர்ம பெண் மயக்க மருந்து தெளித்து திருடிச் சென்றது தெரியவந்தது. அந்த மர்மப்பெண்ணை சாந்தம்மள் குடும்பத்தினர் தேடிஉள்ளனர். அந்த பெண் கிடைக்காததால் சந்தம்மாள் கிடும்பத்தினர் திருப்பதி காவல்துறையிடம் புகர் அளித்துள்ளனர். பின்னர் அந்த நகையை திருடிச்சென்ற மர்ம பெண்ணை திப்பதி காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

Leave a Response