கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்க டி.ஜி.பி. அலுவலகத்தில் மு.க.ஸ்டாலின் மனு

09bce010_2457958fஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரி அலங்காநல்லூரில் நேற்று இளஞர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் ஈடுபட்ட இளஞர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி பின்னர் அவர்களை கைது செய்தனர்.

இந்நிலையில், அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்க டி.ஜி.பி. அலுவலத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மனு அளித்துள்ளார்.

மேலும் தை மாதத்திற்குள் ஜல்லிக்கட்டு வழக்கமாக  நடைபெறும் இடங்களில், ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

Leave a Response