எஸ்.பி.பாலசுப்ரமணியனை ரெக்கார்டிங் ஸ்டுடியோக்குள் அனுமதிக்க மறுத்த வாட்ச்மேன்

04-1433405735-spb4பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்கள் சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் வகையில் ஆர்.கே.வி  ஸ்டுடியோஸில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், அவரது மனைவி சாவித்ரி, கே.ஜே.யேசுதாஸ் மற்றும் அவரது மனைவி பிரபா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் தன்னுடைய முதல் பாடல் பதிவு பற்றி பகிர்ந்துகொண்டார்.

சுமார் 50 வருடங்களுக்கு முன்பு, பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் முதல் முறையாக பாடல் பதிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். அன்று அவரை ரெக்கார்டிங் ஸ்டுடியோவிற்கு அழைத்து செல்லவிருந்த கார் வரவில்லை. எஸ்.பி.பி’யோ மதியம் 2:00 மணிக்கு ரெக்கார்டிங் அரங்கில் இருக்கவேண்டும், அவரை அழைத்து செல்ல கார் அனுப்பப்படும் என்று சொல்லப்பட்டு அவருக்கு கார் வரவில்லை என்ற காரணத்தினால் அவர் நிராகரிக்கப்பட்டாரோ என்று ஒரு சந்தேகம் எஸ்.பி.பி மனத்தில் ஏற்பட்டுள்ளது.

அப்போது அவருக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்த அவருடைய நண்பர் அவருடன் இருந்தார்.  விரக்தியில் இருந்த எஸ்.பி.பி’யை அவருடைய நண்பர் ஆறுதல் கூறிய பின்னர், இருவரும் அவர்களுடைய சைக்கிலில் விஜயா ரெக்கார்டிங் ஸ்டுடியோவிற்கு சென்றுள்ளனர். ஸ்டுடியோவிற்கு வெளியே காவலுக்கு இருந்த வாட்ச்மேனிடம் எஸ்.பி.பி ரெக்கார்டிங்கிற்கு வந்துள்ளார் என்று சொல்ல, அந்த வாட்ச்மேன்னோ ஏன் நடிக்க வரவில்லையா என கிண்டலடித்துள்ளார்.

அப்போது எஸ்.பி.பி அந்த அசிங்கத்தை தாங்க முடியாமல் அங்கிருந்து திரும்பிச் சென்றுவிடலாம் என்று அவருடைய நண்பரிடம் கூறியுள்ளார்.  அப்போது அவருடைய நண்பர் அந்த வாட்ச்மேனிடம் அவர்கள் வந்த இரு சைக்கிள்களையும் மற்றும் எஸ்.பி.பி அவர்களையும் அடகு வைத்துவிட்டு, அவர் மட்டும் ரெக்கார்டிங் ஸ்டுடியோவிற்குள் சென்று விஷயத்தை சொல்ல பிறகு எஸ்.பி.பி உள்ளே அழைக்கப்பட்டார். அன்று தான் அவருடைய முதல் பாடல் பதிவு செய்யப்பட்டது.

Leave a Response