சாலமன் தீவுகளில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


screen-shot-2016-12-08-at-11-37-09-amதென் பசுபிக் கடலில் உள்ள சாலமன் தீவுகளில் நள்ளிரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சாலமன் தீவின் தென்மேற்கு பகுதியிலிருந்து  68 கி.மீ தொலைவில் உள்ள கிராகிரா என்ற இடத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் பல இடங்களில் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. தொலைபேசி, மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பாக உயரமான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.


 

Leave a Response