ஜல்லிக்கட்டுக்கு எதிராக போராடப்போகும் ரஜினியின் மகள்..?

 

sowndarya-rajini

மண்ணெண்ண வேப்பெண்ண வெளக்கெண்ண தமிழ் நாடு மக்கள் எப்படி போனா எனக்கொன்ன அப்படிங்குற மன நிலைக்கு ரஜினி குடும்பம் வந்திருக்கும் போல, ரஜினியின் இளைய மகளான சொந்தர்யா ரஜினிகாந்த் தற்போது தமிழக மக்களுக்கு செய்துள்ள துரோகம் இதோ :-

“இந்திய மிருகங்கள் நல வாரியம்” இவரை தங்களது விருப்பு கூட்டு உறுப்பினராக சேர சொல்லி அழைப்பு விடுத்தனர் அதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது தான் கேவலம்.

தமிழ் நாட்டின் பாரம்பரியம் மிக்க இந்த வீர‌ விளையாட்டான ஜல்லிக்கட்டை இந்த விளங்குகள் அமைப்பும் தான் முதலில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. அப்படி இருக்கும் போது எப்படி இவர் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டதுதான் ஆச்சரியம்.

விளங்குகளின் வீர விளையாட்டை பற்றி அறியாதவர்கள் மட்டும் தான் இந்த மாதிரியான அமைப்புகளில் உள்ளனர். அவர்களுக்கு அந்த இனத்தைப்பற்றி கவளை இல்லை, வருடம் முழுவதும் உழைத்து களைத்துப் போன அந்த விவசாயி ஒரு நாள் விளையாட முடியவில்லை என்று அவர் அழுகையைப் பற்றி கவலை இல்லை, அப்படி இருக்கும் போது ஜல்லிக்கட்டை எப்படி தடை செய்யலாம்? என்று எல்லோரும் கேட்டுக்கொண்டிருக்கும் போது ரஜினியின் மகள் இந்த கும்பலில் வந்து தண்னை சேர்த்துக் கொண்டிருக்கின்றார்.

தமிழக மக்கள் தான் எனக்கு சோறு போட்டார்கள் என்று மார் தட்டிக்கொண்டிருக்கும் ரஜினியின் மகள் இப்படி தமிழக மக்களுக்கு துரோகம் செய்யலாமா..? தமிழக மக்களுக்காகத்தான் நான் உழைக்கின்றேன் என்று சொல்லும் ரஜினியின் நிலைப்பாட்டை நாம் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

aa6a3c16-8f88-4df6-ac38-ff7623273898

Leave a Response