அமலா பாலை வெளியேற்று! தனுஷுக்கு கட்டளையிட்ட ஐஸ்வர்யா!!

Sack Amala Paul-Aishwarya Dhanush
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க “வட சென்னை” என்னும் திரைப்படத்தை 2009ம் ஆண்டு முடிவு செய்தனர் வெற்றிமாறன் மற்றும் தனுஷ். “வட சென்னை” திரைப்படத்தின் படப்பிடிப்பு 2012ம் ஆண்டில் ஆரம்பமாக உள்ளதாக 2011ம் ஆண்டு அதிகாரபுர்வமாக அறிவித்தனர். பின்னர் அந்த முடிவு கிடப்பில் போடப்பட்டு பின்னர் 2015ம் ஆண்டு மீண்டும் துளிர் விட ஆரம்பித்தது. இந்த வருடம் நடிகர்கள் முடிவு செயப்பட்டு படப்பிட்ப்பு தொடங்கும் தருவாயில் மீண்டும் சிக்கல்.

“வட சென்னை” திரைப்படத்தை பிரபல தொழிலதிபர் A.சுபாஸ்கரனின் ‘லைகா ப்ரொடக்ஷன்ஸ்’, தனுஷின் ‘ஒன்டர்பார் பிலிம்ஸ்’ மற்றும் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி இனைந்து தயாரிப்பதாக ஒப்பந்தம் போட்டு இந்த வருடம் ஆரம்பமாக இருந்தது. இப்படத்திற்காக நடிகர்கள் தனுஷ்மற்றும் விஜய் சேதுபதி, நடிகைகள் அமலா பால் மற்றும் ஆண்ட்ரியா ஜெர்மையா முடிவு செய்யப்பட்டனர். இப்படத்தில், முதலில் அமலா பாலுக்கு பதிலாக சமந்தா தேர்வு செயப்பாட்டு ஒப்பந்தமும் செய்யும் தருவாயில் இருந்தார் சமந்தா. சமந்தா தனக்கு காதல், திருமணம், ரெஸ்ட் என பல காரணங்களை சொல்லி கழண்டு கொண்டார்.

இந்த இடைப்பட்ட வேளையில் தனுஷ் தயாரிப்பில் “அம்மா கணக்கு” என்னும் திரைப்படத்தில் அமலா பால் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு படத்தில் நடித்தார். தனுஷ் மற்றும் அமலா பால் இருவரும் ஜோடியாக நடித்த “வேலையில்ல பட்டதாரி” திரைப்படத்திலேயே இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி வேலை செய்ததாக சினிமா வட்டாரங்கள் சொல்லிகொண்டன. அதன் காரணமாக தான் தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த “அம்மா கணக்கு” திரைப்படத்திலும் அமலா பாலை இயக்குனரிடம் சிபாரிசு செய்தார் தனுஷ். “வேலையில்ல பட்டதாரி” திரைப்படத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கெமிஸ்ட்ரி “அம்மா கணக்கு” திரைப்படத்தில் நன்றாக பயணிக்க “வட சென்னை” திரைப்படத்திலும் தொடர ரொம்ப மேனகெட்டினார் தனுஷ். அறிவிப்புகளும் வெளிவந்தன. அப்போது தனுஷின் மாமனாரான ரஜினி தனக்கு உடல் நல கோளாறு ஏற்பட, திடீரென அமேரிக்கா சென்றார். அவருடன் தனுஷின் மனைவியும் ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா தனுஷ் சென்றார்.

அமலா பாலுக்கு தனுஷ் கொடுக்கும் முக்கியத்துவத்தை பற்றி கோடம்பாக்கம் முதலாளிகள், மந்திரிகள் மற்றும் குமாஸ்தாக்கள் அமெரிக்காவில் இருந்த ஐஸ்வர்யாவிற்கு தெரிவித்துள்ளனர். தன்னுடைய தந்தையின் உடல் நலத்தின் மேல் மிக கவனம் கொண்டிருந்த அவர் இந்த விஷயத்தை தன்னுடைய மனத்தில் மட்டுமே வைத்துகொள்ள முடிந்தது. இதை பற்றி தன்னுடைய குடும்பத்தார் யாரிடமும் தெரிவிக்காத ஐஸ்வர்யா, தன்னுடைய தந்தையுடன் சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பி வந்த அவர் தனுஷை காச்சு….காச்சு என்று காச்சியுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, கணவன் மனைவியான அமலா பால் – இயக்குனர் விஜய் ஆகிய இருவரின் பிரிவுக்கு காரணம் தனுஷ் என்று மீடியாகளில் எழுதப்பட்டதை பற்றி ஐஸ்வர்யாவிற்கு தெரியவர, தனுஷ் மீது அவருக்கு கடுப்பாகியுள்ளது. உடனே தனுஷிடம் “வட சென்னை” திரைப்படத்திலிருந்து அமலா பாலை வெளியேற்ற கட்டளையிட்டுள்ளார் ஐஸ்வர்யா. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவர் இடையிலான பிரச்சனை பற்றி மோப்பம் பிடித்த ரஜினிகாந்த், ஐஸ்வர்யா தனுஷ் ராஜா அண்ணாமலைபுரத்தில் வாங்கியுள்ள புதிய அபார்ட்மெண்டுக்கு திடீர் விஜயம் செய்துள்ளார். அங்கு சென்ற ரஜினி, தனுஷுக்கு கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளதாக நம்பகத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. இருப்பினும் அமலா பாலை “வட சென்னை” படத்திலிருந்து வெளியேற்ற தனுஷ் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

அமலா பால் – இயக்குனர் விஜய் பிரிவில் மட்டும் தனுஷ் பெயர் அடிப்பட்டதாக நினைக்க வேண்டாம்…இதற்கு முன்பு ஒரு பாடகர் குடும்பத்திலும், ஒரு இயக்குனர் குடும்பத்திலும் ஏற்ப்பட்ட பிரிவினை காரணத்துக்கு சாத்சாத் நம்ம தனுஷ் தான் என்று மீடியாக்களில் அப்பப்போது சொல்லப்பட்டது. தனுஷின் பாதை மாறிவிட்டதால் அவர் கதை கேட்பதிலும் சரி தன்னுடைய நடிப்பிலும் சரி, சரியான கவனம் செலுத்தவில்லை என்றும் அதனால் சமீபத்தில் அவர் நடிப்பில் வந்த படங்கள் புஸ்வானம் ஆகியதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் சொல்கின்றன…

Leave a Response