அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 59வது படத்தின் டைட்டில் நேற்று வெளியானது. தெறி என டைட்டில் வெளியான உடனேயே டிவிட்டர் ட்ரென்டிங்கில் கலக்கியது. இதே தலைப்பை மூன்று மாதத்திற்கு முன் சதிஸ் குமார் என்ற உதவி இயக்குனர் தன்னுடைய முதல் படத்திற்காக பதிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, நான் யோசிச்சு மூன்று மாதத்திற்கு முன்பே பெயர் வைப்பேனாம், ரெஜிஸ்டரும் பண்ணுவேனாம். ஆனா ரெஜிஸ்டர் புக் அவங்க கிட்ட இருக்குறதால, என் படத்தலைப்பையே அவர் படத்துக்கு வச்சுப்பாராம். அதுவும் என் அனுமதி இல்லாமா. இதுக்காக நான் சண்டைபோடப்போறதில்லை, என்கிட்ட கேட்ட நானே கொடுத்திருப்பேன என தன்னுடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவருடைய முகநூல் பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
அவர் சண்டை போடமாட்டேன் எனக்கூறினாலும், முறையாக அனுமதிபெறாமல், பதவியை உபயோகப்படுத்தி டைட்டிலை அபகரிக்கப்பது எந்த விதத்தில் ஞாயம். ரெஜிஸ்டர் புக் அவங்க கிட்ட இருக்குறதால, என் படத்தலைப்பையே அவர் படத்துக்கு வச்சுப்பாராம். அதுவும் என் அனுமதி இல்லாமா. இந்த வார்த்தை அவர்களுக்கு ஒரு தலைகுனிவுதான்.