கேரள முதல்வர் தொடங்கி வைத்த படத்திற்கு நஸ்ரியாவின் கணவரால் சிக்கல்..!

மலையாளத்தில் பகத் பாசில் நன்றாக வளர்ந்துவிட்ட இளம் முன்னணி நடிகர்.. நன்கே படங்களில் நம் இதயம் திருடிய நஸ்ரியாவை நம்மிடம் இருந்து களவாடிச்சென்றவர். இப்போது இவரால் ஒரு படம் சிக்கலில் தவிக்கிறது. அதிலும் கேரள முதல்வர் தொடங்கி வைத்த படம் என்பதுதான் ஹைலைட்..

தமிழ் உட்பட மலையாளத்திலும் சேர்த்து பல படங்களை தயாரித்த அரோமா மணி, 2௦12ஆம் வருடம் ஒரு படத்தில் நடிக்க, பாகத்திற்கு அட்வான்ஸ் கொடுத்தார். ஆனால் பகத் பாசிலோ இதோ அதோ அதோ என இழுத்தடிக்கிறாராம்.

பிரச்சனையை தயாரிப்பாளர் சங்கத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார் அரோமா மணி. ஆனால் பக்கத்தோ அந்தப்படத்தில் நடிக்க விரும்பவில்லை என நடிகர்சங்கத்திற்கு கடிதம் எழுதினாராம். ஆனால் அவர் எழுதிய கடித்ததை காட்டாமல், பிரச்சனைக்கு தீர்வ்வும் சொல்லாமல் இழுத்தடிக்கிறார்களாம்..