“நிச்சயம் மொத்த ஸ்கிரிப்ட்டையும் கெடுத்திருப்பேன்” – எஸ்.ஜே.சூர்யா ஓபன் டாக்

இயக்குநராகவும் நடிகராகவும் வெற்றி பெற்ற எஸ்.ஜே.சூர்யா இப்போது ‘இசை’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இந்தப்படத்திற்கு இசையமைத்திருப்பதன் மூலம் மிகப்பெரிய மாற்றத்தை தனது மனதில், வாழ்வில் உணர்கிறாராம் எஸ்.ஜே.சூர்யா.

இதுபற்றி ஒரு பேட்டியில் அவர் குறிப்பிடும்போது, “இசை என்னுள் ஒரு ஆத்மார்த்த மாற்றத்தை கொண்டுவந்திருக்கிறது. இந்த ச்கிரிப்ட்டையே இன்னும் சில வருடங்களுக்கு முன் படமாக்க முயற்சி செய்திருந்தேன் என்றால், அப்போது எனக்குள் இருந்த தீவிரத்திற்கு மொத்த ஸ்கிரிப்ட்டையும் கெடுத்திருப்பேன். ஆனால் இப்போது இருக்கும் பக்குவப்பட்ட மனநிலையில் ‘இசை’யை அழகாக செதுக்கியுள்ளேன்” என்று ஓப்பனாக பேசியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.