வெளியேறினார் எமி ஜாக்ஸன்..! உள்ளே வந்தார் ப்ரணிதா..!

ஏ.எல்.விஜய் இயக்கிய ’மதராசப்பட்டினம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இந்த படத்தைத் தொடர்ந்து அதே விஜய் இயக்கத்தில் ‘தாண்டவம்’ படத்திலும் நடித்த எமி தற்போது, ஷங்கர் இயக்கத்தில் விக்ரமுடன் ‘ஐ’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யாவுடன் இணைந்து ‘மாஸ்’ படத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. இந்தநிலையில் அந்தப்படத்தில் இருந்து எமி ஜாக்ஸன் வெளியேறிவிட்டதாக தகவல் கசிந்துள்ளது. காரணம் முதலில் அவரிடம் கேட்கப்பட கால்ஷீட் 25 நாட்கள்… ஆனால் தற்போது அதில் பாதி நாட்கள் போதுமென்று சொல்லிவிட்டார்களாம்.

நாட்கள் குறையும்போது படத்தில் தனது கேரக்டரும் டம்மியாக இருக்குமோ என பயந்த எமி இந்தப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக சொல்கிறார்கள். அவருக்கு பதிலாக அந்த இடத்தில் சகுனி படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த ப்ரணிதா நடிப்பார் என்று தெரிகிறது.