சேரனின் நாயகிக்கு இன்று திருமணம்..!

சேரனின் ஆஸ்தான நாயகி என்று சொல்லும் அளவுக்கு அவர் இயக்கிய ‘தவமாய் தவமிருந்து’, ‘பொக்கிஷம்’ மற்றும் ‘மிருகம்’, ‘பட்டியல்’ உள்பட பல படங்களில் நடித்தவர் பத்மபிரியா. பரபரப்பாக நடித்துவந்த பத்மபிரியாவுக்கு வாய்ப்புகள் குறைந்ததால், வெளிநாட்டுக்கு சென்று, பாதியில் விட்ட எம்.பி.ஏ படிப்பை தொடர்ந்தார் பத்மபிரியா.

அப்போதுதான் அங்கே படித்த ஜாஸ்மினுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்து இன்று அது திருமணத்தில் முடிந்துள்ளது. ஆம்.. இன்று காலை மும்பையில் பத்மப்ரியாவுக்கும் குஜராத்தை சேர்ந்த ஜாஸ்மின் என்பவருக்கும் இருவீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் செய்துகொண்டாலும் தொடர்ந்து நடிக்க இருப்பதாக கூறியுள்ளார் பத்மபிரியா.