சூர்யா, விஜய்க்கு நடந்தது, அஜித்துக்கு ஏன் நடக்கவில்லை..?

அஜித்தின் 56வது படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ள நிலையில், அவரது 57வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. ஆனால் அந்த தகவலில் உண்மையில்லை என அஜித் தரப்பிலிருந்து சொல்லப்பட்டுள்ளது.

சூர்யாவை வைத்து கஜினியை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், அவரது அடுத்த தமிழ்படமான ‘ஏழாம் அறிவு’ படத்திலும் சூர்யாவை வைத்து இயக்கினார். அதேபோல விஜய்யை வைத்து துப்பாக்கி’யை இயக்கிய கையோடு, அடுத்த தமிழ்ப்படமான ‘கத்தி’யும் விஜய்யுடன் தான்.

ஆனால் முருகதாஸுக்கு தமிழில் முதல் படத்திலேயே தன்னை வைத்து இயக்கும் வாய்ப்பையும், அதன் வெற்றி மூலம் அவருக்கு நிலையான முகவரியும் தந்தவர் அஜித். ஆனால் அடுத்ததாக அவருடன் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றும் எண்ணம் கூட முருகதாஸுக்கு இருப்பதாக தெரியவில்லை.

குறைந்தபட்சம் எதிர்காலத்தில் அப்படி ஒரு கதை கிடைக்கும்போது இருவரும் சேர்ந்து பணியாற்றுவோம் என்கிற வார்த்தைகூட முருகதாஸின் வாயிலிருந்து இதுவரை வெளிவரவில்லை. மீண்டும் இருவர் கூட்டணி அமையாத என அஜித்தின் ரசிகர்கள் எதிர்பார்ப்பது நன்றாகவே தெரிகிறது.

சூர்யா, விஜய்யுடன் தொடர்ந்து பணியாற்றும் முருகதாஸுக்கு மிகவும் எளிமையான, அன்பான, நம்பர்-1 இடத்திற்கு நெருக்கமாக இருக்கின்ற மனிதரான அஜித்துடன் ஏன் அடுத்த படம் பண்ணமுடியவில்லை.? இதற்கு முருகதாஸ் தான் பதில் சொல்லவேண்டும்.