வாய்ச்சொல் வீரர் விஜய்..! செயல்வீரர் விஷால்..!

ஒரு காலத்தில் கொக்கோகோலா விளம்பரத்தில் நடித்து அதன் புகழை ஆஹா..ஓஹோ என பரப்பி வந்த விஜய், தற்போது ‘கத்தி’ படத்தில் இடம்பெற்ற வசனத்தின் காரணமாக கோலா கம்பெனியின் தாமிரபரணி தண்ணீர் சுரண்டலுக்கு எதிராக குரல் கொடுத்தார்.. கவனிக்கவும் குரல் மட்டும் தான் கொடுத்துள்ளார்.

ஆனால் திருட்டு விசிடிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் விஷால் களத்தில் இறங்கி அதிரடி நடவடிக்கைகளும் எடுத்து வருகிறார். தன் படம் என்றில்லாமல், மற்றவர் படங்களுக்கும் இதே பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக முன்னாள் நிற்கிறார் விஷால்.

சில மாதங்களுக்கு முன் புதுக்கோட்டையில் ‘வடகறி’ மற்றும் ‘உன் சமயலறையில்’ ஆகிய படங்களின் திருட்டு விசிடிக்களை விற்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்திய விஷால், இப்போது பூஜை’, ‘கத்தி’ படங்களின் திருட்டு விசிடி விற்ற இரண்டு கடைகள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார். இவரது செயல்வேகம் கண்டு விஜய்யே டிவிட்டரில் விஷாலை பாராட்டியிருக்கிறார்.