“கத்தியில் நடித்தது நான் தான்.. விஜய் அல்ல!”

ஒரு படம் ஹிட்டானால் போதும் அதன் வெற்றிக்கு பலபேர் சொந்தம் கொண்டாடுவது வாடிக்கையான ஒன்றுதான். அதில் பிரச்சனை ஒன்றும் இல்லை.. ஆனால் என் கதையை திருடி படமாக்கிவிட்டார்கள் என ஒருவர் சர்ச்சையை கிளப்பினால் கொஞ்சம் கவனிக்க வேண்டியதாகத்தான் இருக்கிறது.

‘கத்தி’ படத்தின் கதை விவகாரத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இப்படிப்பட்ட சிக்கலில் தான் சிக்கியிருக்கிறார் என்றால் படத்திற்கு இசையமைத்த அனிருத்தும் ஒரு பாடலில் சில இடங்களில் வெளிநாட்டு ஆல்பம் ஒன்றிலிருந்து சில பிட்டுகளை காப்பி அடித்திருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது.

இனி யாரோ ஒருவர் புதிதாக கிளம்பி, படத்தில் நடித்திருப்பது விஜய் அல்ல.. நான் தான் என்று சொல்லாமல் விட்டால் சரி…