கல்யாணத்திற்கு ஒகே சொல்லிவிட்டார் பூஜா..!

அழகான திறமையான நடிகை பூஜா என்பது பல படங்களில் நிரூபிக்கப்பட்ட ஒன்று. சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கியதால் திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என பேச்சு அடிபட்டது. ஆனால் திடீரென ‘விடியும் முன்’ படம் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

திருமணம் பற்றி நேரடியாக வாய் திறக்காவிட்டாலும் பேட்டிகளில் எல்லாம் ஆர்யாவை பற்றி அவர் புகழ்ந்து தள்ள ஒருவேளை ஆர்யாவைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறாரோ என செய்திகள் இறக்கைகட்ட ஆரம்பித்தன.

ஆனால் தற்போது அவரது நண்பரான தீபக் சண்முகானந்தன் என்பவர் பூஜாவிடம் திருமணம் புரபோஷல் பண்ணியிருப்பதாகவும் அதற்கு பூஜா ‘எஸ்’ சொல்லி விட்டதாகவும் தகவல். அனேகமாக அடுத்த வருட ஆரம்பத்தில் ‘டும் டும் சத்தம் கேட்கும் என எதிர்பார்க்கலாம்.