போரூரில் விஜய்க்கு சிலை திறக்கும் ரசிகர்கள்..!

குஷ்புவிற்கு கோவில் கட்டிய புண்ணியவான்கள் தானே நம் ரசிகர்கள்.. அந்த வரிசையில் குஷ்புவை தொடர்ந்து சிலை வைக்கப்படும் இரண்டாவது தமிழ்சினிமா நட்சத்திரம் என்கிற பெருமையை தட்டிச்செல்பவர் நம் இளைய தளபதி விஜய் தான்.

இதற்கு முன்னால் அவ்வப்போது நயன்தாரா, நமீதாவுக்கெல்லாம் கோயில் கட்டப்போவதாக காற்றுவாக்கில் செய்திகள் வரும். ஆனால் அவை வெறும் செய்திகளாகவே நின்றுவிடும். ஆனால் விஜய் ரசிகர்கள் தான் கில்லிகளாச்சே.. நினைத்ததை முடித்துவிட்டார்கள்.

ஆம்.. விஜய்க்கு போரூர் அருகில் உள்ள ஆலப்பாக்கத்தில் உண்மையாக சிலை வைத்துவிட்டார்கள்.. இந்த சிலையை வடிவமைப்பதற்கான செலவு ஒரு லட்சம் ரூபாய். நாளை காலை 11 மணிக்கு இந்த சிலை திறப்புவிழா நடைபெறவுள்ளது. ‘கத்தி’ படம் நன்றாக ஓடும் உற்சாகத்தில் இருக்கும் விஜய் ரசிகர்களுக்கு இது இன்னொரு இனிப்பான செய்திதான்.