சரித்திர நாயகர்களின் பெயரில் உலாவரும் ஆர்யா-விஜய்சேதுபதி..!

“சிறையில் உள்ள எல்லோருமே குற்றவாளிகள் அல்ல.. நமது சரித்திரத்தின் பெரும் அத்தியாயங்கள் சிறைச்சாலையில் தான் அரங்கேறி உள்ளது. மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா போன்ற மாபெரும் தலைவர்கள் சிறைசாலையில் இருந்து தான் தங்களது வெற்றி சரித்தரத்தை துவங்கினர். அதனால் சிறைச்சாலை என்னுடைய படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே மாறிவிட்டது” என்கிறார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்.

இவர் சொல்லும் இந்த டீடெய்ல் எல்லாம் அவர் இயக்கிவரும் ‘புறம்போக்கு என்னும் பொதுவுடைமை’ படத்தை பற்றித்தான். சமுதாயத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டும் கதையம்சம் உள்ள படங்கள் தான் இயக்குனர் ஜனநாதனின் அடையாளம். ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம், மற்றும் கார்த்திகா என நட்சத்திர குவியலாக திகழும் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்களையும் நமது சரித்தரத்தில் இருந்துதான் எடுத்திருக்கிறார்

சுதந்திர போராட்ட காலத்தில் மதுரையில் பிறந்து பின்னர் ஆந்திராவில் வாழ்ந்த வரலாற்று நாயகன் பாலுவின் பெயர்தான் ஆர்யாவுக்கு சூட்டப்பட்டு உள்ளது. தமிழகத்தின் புரட்சி வீராங்கனை வேலு நாச்சியார் அவர்களின் பாசறையில் முக்கிய பங்கு வகித்து, பின்னர் ஆங்கிலேயர்களின் ஆயுத கிடங்கை மனித வெடிகுண்டாக மாறி அழித்த குயிலின் பெயர் கார்த்திகாவுக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் காலத்தில் அவர்களது கல்வி முறையை அறிமுக படுத்தியவரும், ஆங்கிலேயர்களின் கடுமையான தண்டனை முறையை அறிமுக படுத்தியவருமான மெக்கலேவின் பெயர் ஷ்யாமுக்கும், மிகவும் வித்தியாசமான யாரும் எதிர்பாராத ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்துக்கு யமலிங்கம் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.