அஜித் படத்துக்கு இரண்டாம் பாகம் வரவும் வாய்ப்பிருக்காம்..!.

தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் பற்றி கேட்டால் வாய் திறக்க மறுக்கிறார் கௌதம். ஆனால் முதல் 45 நிமிடங்கள் வரை செல்லும் கதையில் யார் இந்த மனிதர் என ரசிகர்களை பிரமிக்க வைத்துவிடுவாராம் அஜித்.

அதுமட்டுமல்ல படத்தில் இடம்பெறுள்ள சத்யதேவ் என்கிற அஜித்தின் கதாபாத்திரம் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.. அதாவது இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கு வாய்ப்பு தரும் வகையில் அமைந்திருக்கிறதாம்.

ஆண்டவன் கருணை காட்டினால் அதிலும் மீண்டும் இணைவோம் என்கிறாராம் கௌதம் மேனன். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் தன் கேரக்டர் பெயரை முன்னிறுத்தி தலைப்பு வைக்கவேண்டாம் என கறாராகவே சொல்லிவிட்டாராம் அஜித்.