30 வருட போராட்டத்திற்கு பரிசாக கிடைத்த ‘ஆலமரம்’..!

விஜய்சேதுபதி நடித்துள்ள ‘வன்மம்’ படத்தை இயக்கியுள்ள ஜெயகிருஷ்ணாவுக்கு அந்த வாய்ப்பு அவர் சினிமாவில் நுழைந்து 25 வருடங்கள் கழித்தே கிடைத்திருக்கிறது. அதேபோலத்தான் ‘ஆலமரம்’ படத்தை இயக்கியுள்ள எஸ்.என்.துரைசிங்கிற்கும் 30 வருடம் கழித்து தன்னை நிரூபிக்கும் முதல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இவர் பாக்கியராஜ் மற்றும் ஜி.எம்.குமாரிடம் உதவி இயக்குனராக வேலைபார்த்தவர்.. அதுமட்டுமல்ல, இயக்குனர் ராஜ்கபூருடன் சேர்ந்து பணியாற்றியவர். இந்த ஆலமரத்தை ரசிகர்களை மிரட்டும் பேய்ப்படமாக எடுத்துள்ளார் துரைசிங்.

ராம்ஜீவன் என்பவர் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்தப்படத்தில் கதாநாயகனாக புதுமுகம் ஹேமந்த் நடிக்க, மலையாளத்தை சேர்ந்த அவந்திகா மோகன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சிந்து என்பவர் பேயாக மிரட்டியுள்ளார்.