ரோடு போட்டார் ரமேஷ்கண்ணா..! பஸ் விட்டார் சந்தானம்..!

ரஜினி படங்களில் ஹைலைட்டானவை காமெடி ட்ராக்குகள் தான். ‘லிங்கா’ படத்தை, தான் இயக்கப்போகிறோம் என முடிவான உடனேயே தனது ஆஸ்தான உதவிய இயக்குனாரான நடிகர் ரமேஷ் கண்ணாவிடம் கதையை சொல்லி ரஜினியுடன் படம் முழுவதும் வரும்படியான காமெடி கேரக்டர் ஒன்றை டெவலப் பண்ண சொன்னாராம் கே.எஸ்.ரவிகுமார். ஏற்கனவே ‘ஆதவன்’ படத்தின் கதையை கூட ரமேஷ்கண்ணாவிடம் தானே வாங்கி படம் இயக்கினார் ரவிகுமார்.

ரமேஷ் கண்ணாவும் பக்காவாக ஒரு காமெடி ட்ராக்கை தயார் பண்ண, அதைகேட்ட ரஜினிக்கு ரொம்பவே பிடித்துவிட்டதாம். சரி காமெடிக்கு யாரை போடலாம் என சூப்பர்ஸ்டார் கேட்க, தன பெயரைத்தான் தனது குருநாதர் சொல்லப்போகிறார் என ஆவலுடன் அவரது முகத்தை பார்த்திருக்கிறார் ரமேஷ் கண்ணா..

ஆனால் ரவிகுமாரோ வடிவேலுவின் பெயரை சொல்ல, ரமேஷ் கண்ணாவின் முகம் சுருங்கிப்போனதாம். அப்போதைக்கு வடிவேலுவையும் ஓகே சொல்லாத ரஜினி, சில நாட்கள் கழித்து ரவிகுமாரை அழைத்து அந்த கேரக்டரில் சந்தானத்தை புக் பண்ணி விடுங்கள் என்று சொல்லிவிட்டாராம்.

ரவிக்குமாரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் படத்தில் இன்னொரு காமெடி கேரக்டர் ஒன்றும் கூடவே அவ்வப்போது ட்ராவல் ஆகிறதாம். அதற்குத்தான் சந்தானத்தை மனதில் நினைத்திருந்தாராம் கே.எஸ்.ரவிகுமார்

சரி அதற்கு யாரை போடலாம் என கேட்டபோது, “அதுதான் இந்த டிவி நிகழ்ச்சிகளில் குழந்தைகளை வைத்து சிரிப்பு காட்டுகிறாரே இமான் அண்ணாச்சியா.. அவர் பெயர்.. அவரை போட்டுவிடுங்களேன்” என்று கூலாக சொல்லிவிட்டாராம் ரஜினி. ஆக ரோடு போட்டார் ரமேஷ்கண்ணா..! ஆனா அதுல பஸ் விட்டார் சந்தானம்..! சைக்கிள் கேப்பில் கார் ஒட்டுகிறார் இமான் அண்ணாச்சி.