டாப்ஸி போனார்.. பிந்து வந்தார்..!

சில ஆச்சர்யங்களை நாம் சந்தித்துத்தான் ஆகவேண்டும்.. சிம்புவும் நயன்தாராவும் மீண்டும் நட்பாக மாறியிருப்பதையும் அப்படித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. பாண்டிராஜ் இயக்கத்தில் இவர்கள் இருவரின் நடிப்பில் உருவாகி வரும் ‘இது நம்ம ஆளு’ படம்தான் இந்த மாயத்தை செய்து வருகிறது..

நயன்தாரா தான் கதாநாயகி என அறிவிக்கப்பட்டதுமே, சரிதான் இயக்குனர் பாண்டிராஜுக்கு இனி டென்ஷன் மேல் டென்ஷன் தான் என பலரும் நினைத்திருக்க, அவரோ கூலாக சிம்பு, நயன்தாராவை வைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.

இப்போது சொல்லவந்த விஷயம் இதுவல்ல.. இந்தப்படத்தில் பிளாஸ்பேக் காட்சிகளில் இன்னொரு கதாநாயகி கேரக்டர் ஒன்று வருகிறது. அதில் டாப்ஸி தான் நடிப்பார் என்று முதலில் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் டாப்ஸி ஒப்புக்கொள்கிறமாதிரி தெரியவில்லை.

அதனால் தற்போது அந்த கேரக்டருக்கு பிந்து மாதவியை செலக்ட் செய்திருக்கிறார்களாம். ஏற்கனவே பாண்டிராஜின் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தானே பிந்துமாதவி.. அதனால் உடனே ஓகே சொல்லிவிட்டதாகவும் தெரிகிறது.. .