“திருட்டு விசிடி குண்டர்களுக்கு மரண அடி விழும்” – பார்த்திபன் எச்சரிக்கை..!

வரும் ஆகஸ்ட்-15ஆம் தேதி தனது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தை ரிலீஸ் செய்கிறார் பார்த்திபன்.. படம் வெளியான அடுத்த நாளே திருட்டு விசிடி வெளியாகி விடும் சூழ்நிலையில் திருட்டி விசிடியை ஒழிப்பது குறித்த இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கருத்தரங்கம் ஒன்றை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நேற்று நடத்தினார் பார்த்திபன்..
ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், “திருட்டு விசிடியில் திரைப்படங்களை பார்க்க அனுமதிக்க மாட்டோம்” என்கிற உறுதிமொழியை அதில் கலந்துகொண்ட இளைஞர்கள் எடுத்துக்கொண்டனர். இது தவிர பார்த்திபன் திருட்டு விசிடி தயாரிக்கும் குண்டர்களுக்கு ஒரு எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்..
“அயல்நாட்டு படங்களின் கதைகளை திருடி எடுக்கும் தமிழ்ப்படங்களை நாங்கள் ஏன் திருட்டு டிவிடியாக விற்பனை செய்தல் கூடாது என்று குற்றஞ்சாட்டும் குணச்சித்திரங்களே.. தயவுசெய்து இப்படத்தை முதல் காட்சியிலேயே பார்த்துவிடுங்கள்.. உங்கள் குற்றப்பத்திரிகையில் என் படம் பதிவாகவில்லை எனில், முறைகேடாக இந்தப்படத்தை எந்தவிதத்திலும் திருடி எங்கள் உயிரையும் உழைப்பையும் உறிஞ்சாதீர்கள். மீறினால் தண்டிக்கப்படுவீர்கள். அதிலிருந்தும் தப்பினால் மரண அடி விழும்… விதி வசத்தால்..” என திருட்டுத்தனமாக படம் தயாரிப்பவர்களுக்கு படம் பார்ப்பவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார் பார்த்திபன்.
பார்த்திபனின் பேச்சுக்கு நிச்சயம் மதிப்பு இருக்கும்..!