குழந்தை பிறக்கும் போது அதன் தொப்புள் கொடியிலும், எலும்பு மழஞ்ஜையிலும் காணப்படும் ஸ்டெம் செல்களைக் கொண்டு பல சிக்கலான நோய்களுக்கு தீர்வு காணலாம் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டது. ஆனாலும் ஸ்டெம் செல் தொடர்பான ஆய்வு என்றாலே ஒரு பக்கம் எதிர்ப்பு இருந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ‘பப்ளிக் ஸ்டெம் செல் பேங்க்’ ஒன்றின் துவக்க விழாவுக்கு வந்திருந்த முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் ஸ்டெம் செல் தெரபிக்கு ஆதரவாக குரல்கொடுத்திருக்கிறார். ஸ்டெம் செல் சம்பந்தமான ஸ்கிரிப்ட் கிடைத்தால் அதில் நடிக்கவும் தயாராக இருக்கிறாராம்.