‘நளனும் நந்தினியும்’ படப்பிடிப்பின்போது நடைபெற்ற தொடர் கொலைகள்

unnamed (44)

லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில் முதலில் உருவான படம் “நளனும் நந்தினியும்”. மைக்கேல், நந்திதா ஜோடியாக நடித்த இந்த படம் வெளியாவதற்குள் நந்திதா நடித்த நிறைய படங்கள் வெளியகி விட்டது.

சூரி, ஜெயபிரகாஷ், அழகம்பெருமாள், சாம்ஸ், ரேணுகா, மதுரை ஜானகி, மதுமிதா, ரவிராகுல், சௌந்தர்ராஜன் என நட்சத்திர பட்டாளமே நைதுள்ள இந்த படத்திற்கு ஒளிப்பதிவு நிஸார், இசை அஸ்வத். வெங்கட் பிரபுவின் உதவியாளர் ஆர்.வெங்கடேசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

படம் பற்றி இயக்குனர் ஆர்.வெங்கடேசன் கூறும்போது, “குடும்பங்களை எதிர்கொண்ட காதல், புரிதல் இல்லாமல் திருமணத்தில் முடிய, பல இன்னல்களைக் கடந்து வெற்றியடைந்து குடும்பங்களை எப்படி இணைக்கின்றது என்பதே இந்த படத்தின் கரு.

மதுரை கானூரில் தொடக்கத்தில் அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருந்த படப்பிடிப்பு, ஒரு கட்டத்தில் படபடப்பானது. ஏனெனில் அப்பொழுது அந்த ஊரில் தொடர் கொலைகள் நடைபெற்றது ஆகையால் அங்கு பெரிய போலீஸ் கும்பலே குவிந்தது. மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

உயிர் பயத்திலும் நாங்கள் படபிடிப்பை நடத்தினோம். அப்பொழுது போலீஸ் எங்களை எச்சரித்தது. இருந்தும் அவர்களிடம் பேசி சமாளித்து படப்பிடிப்பை நடத்தினோம். தயாரிப்பாளரும், ஊர்மக்களும் எங்களுக்கு உறுதுணையாக இருந்தது சிறப்பு. படம் ஜூலை 11 ம் தேதி அன்று உலகமுழுவது வெளியாகிறது” என்றார்.