காதலுக்கு பிரச்சினை இல்லாததுதான் பிரச்சினையே

அம்மா பிலிம் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பாக தயாராகும் படத்திற்கு “காதல் பைத்தியம்” என்று பெயரிட்டுள்ளனர். ஹிந்தியில் “ஏ தில் ராம்தா ஜோகி” என்ற படத்தில் நாயகனாக நடித்த ஆதர்ஷ் தமிழில் அறிமுகம் ஆகிறார். நாயகியாக ஜீவிகா நடிக்கிறார். இவர் கன்னடத்தில் “பிரம்மா விஷ்ணு மகேஷ்வரா” என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

ஆடுகளம் நரேன், Y.G.மகேந்திரன், பிரியா, ஆகியோர் நடிக்க, ஒளிப்பதிவு – B.R. ஜெயன், இசை – எஸ்.பி.வர்மா. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் மாசந்துரு. இவர் கன்னடத்தில் லூஸ்மாதா யோகேஷ், ராகினி திரிவேதி நடித்த “பங்காரி” என்ற படத்தை இயக்கியவர்.

படம் பற்றி இயக்குனர் கூறும்போது, “இளம் காதலர்களாக ஆதர்ஷ், ஜீவிகா இருவரிடையே உருவான காதலுக்கு எந்தவிதமான தடையும் உருவாகவில்லை. பெற்றவர்களாலோ, மற்றவர்களாலோ எந்தவித தடையோ ஏற்படவில்லை. அதனால் இருவருக்குள்ளும் ஒரு சின்ன இடைவெளி ஏற்படுகிறது. அதிலிருந்து அவர்கள் மீண்டு ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா என்பதை சுவை பட சொல்கிறோம்.

சென்னையில் துவங்கிய படப்பிடிப்பு, மதுரை, ஊட்டி., கர்நாடகா, கேரளா போன்ற இடங்களில் நடைபெற உள்ளது என்றார்.

unnamed (31)