அதிக ஓட்டு வாங்க என்னை சிலுவையில் ஏற்றி தூக்கிலிட இந்தியா திட்டம்-விஜய் மல்லையா..!

வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்ற விஜய் மல்லையா அவற்றை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அவரை இந்தியா கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக லண்டன் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில் இங்கிலாந்தில் உள்ள மல்லையா சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் இறுதி வாதங்கள் ஜூலை 31ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால் அவர் மீதான வழக்குகளில் செப்டம்பர் முதல் வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் லண்டனில் மல்லையா நிருபர்களிடம் கூறுகையில், ”எனது சொத்துக்கள் குறித்த பிரமாண பத்திரத்தை லண்டன் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளேன். என் பெயரில் உள்ள சொத்துக்கள், வீடுகளை பறிமுதல் செய்து கொள்ளலாம். ஆனால் லண்டனில் எனது குழந்தைகள் மற்றும் தாய் பெயரில் இருக்கும் சொத்துக்களை எவ்வாறு பறிமுதல் செய்ய முடியும்.

நான் எப்போதும் இங்கிலாந்து குடிமகன் தான். இந்திய குடிமகன் அல்ல. அதனால் எதற்காக நான் இந்தியா வர வேண்டும்?. நான் தப்பி ஓடிவிட்டதாக கூறுவது சரியல்ல. இது அனைத்தும் முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது. இந்தியாவில் தேர்தல் நடக்கும் நேரம் இது. அதனால் அதிக ஓட்டுக்களை பெறுவதற்காக என்னை இந்தியா அழைத்து சென்று சிலுவையில் ஏற்றி தூக்கிலிட விரும்புகிறார்கள்”என்றார்.

Leave a Response