தஞ்சையில் எம்.ஜி.ஆர். விழாவில் கம்பராமாயணம் எழுதியவர் சேக்கிழார் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஊடகங்களுக்கு அரசு அனுப்பிய முதல்வர் உரையிலும் சேக்கிழார் என்றே உள்ளது. முதல்வருக்கு மட்டுமல்ல, அதிகாரிகளுக்கும் கம்பராமாயணம் எழுதியது யார் என்று தெரிவியவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சேக்கிழார் என்று தவறாக கூறியதற்கு அதிகாரிகள் வருத்தம் தெரிவிக்க தமிழ் அறிஞர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
எடப்பாடி பேச்சுக்கு கண்டனம்:
கம்பராமாயணம் எழுதியவர் சேக்கிழார் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் குவிந்து வருகிறது. கம்பராமாயணத்தை எழுதியவர் கம்பர் என்பதை அறியாதவர் தமிழக முதல்வராக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.