தொடரும் அவலம்! திரிபுராவில் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை!

bhaumik-1

திரிபுராவில் பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சாந்தனு பெளமிக் (28) என்ற இவர் “சியாண்டன் பட்ரிகா” மற்றும் உள்ளூர் தொலைக்காட்சி சேனலில் செய்தியாளராக பணியாற்றினார். நேற்று சாந்தனு  மண்டியில் ஒரு கட்சியின் ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியின் செய்திசேகரிப்புக்கு சென்றுள்ளார்.

 bhaumik-2

அங்கிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் அவரை சுட்டு கொன்றதாக தெரிகிறது. சாந்தன் உடல் கைப்பற்றப்பட்டு கோபிடா பலாவ் பன்ட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Response