தெலங்கான அரசு ஹைதராபத்தில் தங்களது ஒவ்வொரு எம்.எல்.ஏ வுக்கு 1 கோடி நிதி ஒதிக்கி சொகுசு பங்களா கட்ட திட்டமிட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் எம்.எல்.ஏ.,க்களின் சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தினார். இதன்பின்னர் அவர் ரூ.50 கோடி செலவில் கட்டப்பட்ட ஆடம்பர பங்களாவுக்கு குடிபெயர்ந்தார்.தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவின் பல நடவடிக்கைகள் சர்ச்சைகளை ஏற்படுத்தியது ஆனாலும் அதை அவர் கண்டுகொள்ளவில்லை.
இந்தநிலையில் தெலுங்கான முதல்வர் சந்திரசேகரராவ், இன்று ஐதராபாத் நகரில், ரூ.100 கோடி செலவில் எம்.எல்.ஏ., குடியிருப்பு கட்ட பணம் ஒதுக்கியுள்ளார். மேலும் ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வும் தங்களது தொகுதியில் அலுவலகத்துடன் கூடிய சொகுசு பங்களா கட்ட தலா ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்