ஜெயலலிதாவின் உடல்நலம் விசாரிக்க அப்போலோ சென்றார் குஷ்பு


jaya-kushதமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், தமிழ் திரைப்பட நடிகையுமான குஷ்பு, இன்று அப்பல்லோ மருத்துவவமனைக்கு வந்திருந்தார்..

அங்கு, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களை சந்தித்து முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் குஷ்பு.


 

Leave a Response