முதலமைச்சர் குணமடைய தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சிறப்பு யாகம்


img-20161022-wa0000முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மந்திரங்களை உச்சரிக்கும் யாகம் நடைபெற்றது.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கல்யாண் தலைமையில் இந்த யாகம் தொடங்கியது. இந்த யாகம் நேற்று மற்றும் இன்று நடைபெறுகிறது.

.இந்த யாகத்தில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் திரைப்பட வர்த்தக சபையில் இருந்து கனகராஜ், கட்ரகட்டா பிரசாத், அருள்பதி, ஆனந்தா சுரேஷ், சிவஸ்ரீ ஸ்ரீனிவாசன், தமிழ் திரைப்படம் தயாரிப்பாளர் கவுன்சில் தலைவர் S.தானு, செயலாளர் T.சிவா, தயாரிப்பாளர்கள் T.G.தியாகராஜன், R.B.சௌத்திரி, கதிரேசன், அமுதா துரைராஜ், இயக்குனர்கள் தொழிற்சங்கத் தலைவர் விக்ரமன், இயக்குனர்கள் மனோபாலா, மனோஜ் குமார், ரமேஷ் கண்ணா, செல்வராஜ், சந்திரன், FEFSIயில் இருந்து கிரிஷன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், தமிழகத்திலுள்ள பிரபல சிவன் கோயில்களிலுள்ள 30 சிவாச்சாரியர்களும் இந்த யாகத்தில் பங்கேற்றனர்.


 

Leave a Response