பிரபல இயக்குனரை கிண்டலடித்த துணை நடிகரின் மரியாதையற்ற செயல்..!

மிகப்பெரிய வெற்றிப்படங்களை இயக்கியவர் இயக்குனர் சரண். கடைசியாக 2009ல் வினய்யை வைத்து ‘மோதி விளையாடு’ படத்தை இயக்கியவர் ஐந்து வருடங்கள் கழித்து அதே வினையை வைத்து இப்போது ‘ஆயிரத்தில் இருவர்’ என்ற படத்தை இயக்கியுள்ளதோடு அவரே படத்தை தயாரித்தும் இருக்கிறார். அவரின் ஆஸ்தான இசையமைப்பாளரான பரத்வாஜ் தான் இந்தப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

வினய்க்கு இந்தப்படத்தில் இரட்டை வேடங்கள்… அவருக்கு ஜோடியாக சாமுத்திரிகா, ஸ்வஸ்திகா, கேஷா என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். நேற்று நடைபெற்ற இந்தப்படத்தின் முதல் டீசர் வெளியீட்டு விழாவில் சரணின் முதல்பட நாயகியான மானு இந்த மூன்று கதாநாயகிகளையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

அதே விழாவில் இயக்குனர் சரண் தன படத்தில் நடித்துள்ள துணை நடிகர் உட்பட பலரையும் மிகுந்த கெளரவத்துடன் அறிமுகப்படுத்தி வைத்தார். ஆனால் இந்தப்படத்தில் நடித்த டேனியல் (ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு) மேடையில் பேசும்போது “டைரக்டர் சரண் ஷூட்டிங் ஸ்பாட்டில் மூன்று கதாநாயகிகளுடன் எப்போதும் சிரித்துபேசிக்கொண்டு இருப்பார்” என போகிறபோக்கில் ஒரு பிட்டை கொளுத்திப்போட்டார்.

கடைசியாக பேசி முடிக்கும்போது “சார் தப்பா எதுவும் பேசியிருந்தா மன்னிச்சுக்குங்க சார்” என ஒப்புக்கு பாவனையும் செய்துவிட்டு அமர்ந்தார். ஆனாலும் சரண் எழுந்து வந்து அதற்கு விளக்கம் கொடுத்தார். துணை நடிகர் கதாபாத்திரத்தில் அதுவும் இன்னும் இரண்டு படங்களில் கூட உருப்படியாக நடிக்காத இவருக்கு ஒரு மிகபெரிய இயக்குனரை கிண்டல் செய்யும் தைரியம் எங்கிருந்து வந்தது என பத்திரிகையாளர்கள் பலர் கோபத்தில் முகம் சுழித்ததை காண முடிந்தது.