சின்ன பட்ஜெட்டில் ஆக்ஷன் படம் – செல்வராகவன் முடிவு!

Selvaraghavan

ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் போன்ற பெரிய பட்ஜெட் படங்களை இயக்கிய செல்வராகவன், தற்போது சிறிய பட்ஜெட்டில் இரண்டு படங்கள் இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகம் படத்துக்கு எழுந்துள்ள அனேக விமர்சனங்கள் தான் அவரை இந்த பாதையில் திருப்பி விட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டாம் உலகத்துக்குப் பிறகு, செல்வராகவன் சொந்தப்படம் எடுப்பார் என்று கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்துவது போல, அவரே ஒரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

‘குறைந்த பட்ஜெட்டில் சில படங்களைச் செய்ய விரும்புகிறேன். அதில் முதலாவதாக ஒரு ஆக்ஷன் படம் எடுக்கப்போகிறேன். மற்ற விவரங்களை விரைவில் சொல்கிறேன்’ என்று கூறியுள்ளார்.