இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே நடிக்கும் த்ரில்லர் வித்தையடி நானுனக்கு!

1059166_676677812359127_603393603_n

‘ஹீரோவும், ஹீரோயினும் புதுமுகம். ‘மத்தவங்கன்னு யாருமே கிடையாது. மொத்தமே ரெண்டு பேர்தான் நடிக்கறாங்க.‘ படத்தை இயக்கி நடிக்கிறார் ராமநாதன் கே பகவதி.  ஹீரோயின் அறிமுக நாயகி சௌரா! மிகவும் அளவான பேச்சு! எப்போதும் புத்தகம் படித்துக் கொண்டிருப்பார்! புத்தகங்கள் அலுக்கும் போது ஸ்க்ரிப்ட். திரும்பத் திரும்ப சலிக்காமல் ஸ்க்ரிப்டை வாசித்து உள்வாங்கிக் கொள்கிற அந்த டெடிகேஷன் அபாரம்.  தொடர்ந்து இரண்டு மாதங்கள் ஸ்க்ரிப்டில் உள்ள காட்சிகளை பயிற்சி செய்த பின்தான் படிப்பிடிப்புக்கே வந்தார்.

கொடைக்கானலில் உறையும் குளிரிலும், உற்சாகம் குறையாமல் நடித்த சௌரா WCC மாணவி. தியேட்டர் அனுபவம் உண்டு. முதல் படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரம். இலகுவாகச் சுமந்திருக்கிறார். இரண்டே பேர் நடிக்கும் படத்தில் இரண்டே இரண்டு இசைக்கருவிகளை வைத்து ஒரு பாட்டு!

கிடாரும், பியானோவும் ஒன்றையொன்று காதலிக்கும் பாயும் ஒளி நீ எனக்கு பாரதியாரின் கண்ணம்மா பாட்டு!! ஒளிப்பதிவு- ராஜேஷ் கடம்கோட். இசை-விவேக் நாராயன்