சரண்யா மோகன் நடிக்கும் கலகலப்பான படம் ‘கோலாகலம்’!

kolagalamm

பி.ஜி.எஸ் பிலிம் இன்டர்நேஷனல் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘கோலாகலம்’ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் அமல் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சரண்யா மோகன் நடிக்கிறார். மற்றும் கஞ்சா கருப்பு, தேவதர்ஷினி, மீரா கிருஷ்ணன், வியட்நாம் வீடு சுந்தரம், மனோபாலா, வி.கே.ஆர்.ரகு, விஷவாந்த் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – கே.எஸ். செல்வராஜ், இசை – பரணி. கதை, திரைக்கதை, தயாரிப்பு, இயக்கம் பொறுப்பேற்றிருப்பவர் – பி.ஜி. சுரேந்திரன்.

படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. சமீபத்தில் இப்படத்திற்காக

“செம செம ரகளை

கலக்கப் போறேன் சகல”

என்ற பாடல் காட்சி பின்னி மில்லில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு அமல் – கஞ்சா கருப்பு பங்கேற்க படமானது. படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு திருச்சி, கும்பகோணம், சென்னை, ஊட்டி போன்ற இடங்களில் நடைபெற்று முடிந்திருக்கிறது. கலகலப்பான படமாக ‘கோலாகலம்’ உருவாகி இருப்பதாகச் சொல்கிறார் இயக்குனர் பி.ஜி.சுரேந்திரன்.