நீட் தேர்வு ரத்து விவகாரம் தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர திமுக திட்டம்..!

நீட் தேர்வு ரத்து செய்வது குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வர திமுக திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

காயிதே மில்லத்தின் 123வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அவரது நினைவிடத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், தமிழை மத்தியில் ஆட்சி மொழியாக பாடுபட்ட காயிதே மில்லத்தின் கனவு நினைவாக திமுக தொடர்ந்து பாடுபடும்.

நீட் தேர்வால் தொடர்ந்து தமிழகத்தில் மாணவர்களின் உயிர்கள் காவு வாங்கப்படுவது ஏற்புடையதல்ல. இனியும் எந்த உயிரும் நீட் தேர்வால் பறி போகக்கூடாது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சட்டசபையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response