சசிகுமாரோடு கைகோர்த்த சந்தானம்!!

சுந்தரபாண்டியன் வெற்றி படத்திற்கு பிறகு சசிகுமார் நடித்து வரும் படம் குட்டிப்புலி. இந்த படம் மே 30ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை அடுத்து சசிகுமார் நடித்து வரும் படம் பிரம்மன். இயக்குனர் மவுலி மற்றும் கமலிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சாக்ரட்டீஸ் இயக்குகிறார். இவர் இயக்கும் முதல் படம் ‘பிரம்மன்’ சசிகுமார் ஹீரோவாக நடிக்க, இவருக்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடிக்கிறார். சந்தானம் மற்றும் சூரி போன்றவர்களும் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தில்தான் சசிகுமாரின் நண்பனாக, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ‘நான் ஈ’ சுதீப். தமிழில் தற்போது நடிக்க வேண்டாம் என்று இருந்தவருக்கு, இப்படத்தின் தயாரிப்பாளர் மஞ்சு கேட்டுக்கொண்டதன் பேரில் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

மதுரையில் இருபது நாட்கள் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர்.. அடுத்து சென்னையில் எடுக்கும் காட்சிகளில் சுதீப் கலந்து கொள்ளவிருக்கிறார். இதனால் படத்துக்கு மேலும் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது’ என்கிறார் இயக்குனர் சாக்ரட்டீஸ்.