திரு – புகழ் ஆக மாறிய திருப்புகழ்!!

ரியல் ஸ்கிரீன் என்ற படநிறுவனம் தயாரிக்கும் படம் ‘திரு புகழ்‘. இந்தப் படத்தில் திலீப்குமார், பிரபுராஜ் இருவரும் கதாநாயகர்களாக  நடிக்கிறார்கள். கதாநாயகியாக திவ்யாசிங் நடிக்கிறார். சீதா, நளினி, சுபலேகா, சுதாகர், சுதா, காதல் தண்டபாணி, ரியாஸ்கான், கஞ்ச கருப்பு மற்றும் பாண்டு ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு- தேவராஜ். இசை-K.ராம்ஜி. கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் பொறுப் -பேற்றிருப்பவர். K.அர்ஜூன ராஜா

படம் பற்றி இயக்குனர்  K.அர்ஜூன ராஜா கூறுவது, “ஒரு பெண் வயதிற்கு வருவதற்கு முன்பு வரை பெற்றோர்களின் செல்லப் பிள்ளையாக இருப்பாள். வயது வந்த பின்பு அதே பெற்றோர்களுக்கு அவள் சிறை கைதி ஆகிறாள்.

வயசு வருவதற்கு, முன்பு பட்டாம் பூச்சியாக சிறகடிக்க முடிந்த அவளால் முடியாமல் போகிறது. காதல்ங்கிற பேர்ல அவளுக்கு ஏற்படும் தொல்லைகள் சொல்லி மாளாது அதுதான் படத்தின் கதை என்கிறார் இயக்குனர் K.அர்ஜூன ராஜா.

படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டி, திண்டுக்கல், கொடைக்கானல் போன்ற இடங்களில் நடைபெற்றது. இயக்குனர் ஏற்கனவே மையம் கொண்டேன், கோவலனின் காதலி என்ற படங்களை இயக்கி முடித்துள்ளார். அந்த படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. சென்சாரில் திருப்புகழ் என்ற பெயர் திரு – புகழ் என்று மாற்ற சொல்லியதால் மாற்றப்பட்டுள்ளது.