ரோஹிங்கியா மக்கள் மீள் குடியேற்றம்: ஆங் சான் சூகி உடன் போப் பிரான்சிஸ் ஆலோசனை

201711271631232248_Pope-lands-in-Myanmar-for-difficult-visit-amid-Rohingya_SECVPF

கலவரத்தால் வங்காளதேசத்திற்கு தப்பிச்சென்ற ரோஹிங்கியா இன மக்களை மீள் குடியேற்றம் செய்வது தொடர்பாக மியான்மர் அரசின் தலைமை ஆலோசகருடன் போப் பிரான்சிஸ் ஆலோசனை நடத்துகிறார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

201709131241354492_1_my1._L_styvpf

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் நடத்திவரும் ஒடுக்குமுறைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் உள்பட பல உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சமீபத்தில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டுக்கு இடையில் மியான்மர் அரசின் தலைமை ஆலோசகரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகியை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் சந்தித்து, ரக்கினே மாநிலத்தில் உள்ள மக்களுக்கு மனிதநேய அடிப்படையிலான உதவிகள் சென்று சேருவதை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் மியான்மர் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, ராணுவ அதிகாரிகள், ரோகிங்கியா மக்கள் என பல தரப்பினரையும் அவர் சந்தித்து பேசினார். இதனையடுத்து, அந்நாட்டின் தலைமை ஆலோசகராக இருக்கும் ஆங் சான் சூகியுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது, மியான்மரை விட்டு வெளியேறிய அகதிகள் கண்ணியமான வகையில் மீண்டும் தாய்நாடு திரும்ப தேவையான நடவடிக்கைகளை ஆங் சான் சூகி மேற்கொள்ள வேண்டும் என டில்லர்சன் வலியுறுத்தினார். நாடு திரும்பும் அகதிகளின் மீள்குடியமர்த்தல் தொடர்பாக தேவையான வரையறைகளை வகுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

aung-san-suu-kyi-a

வங்காளதேசத்தில் தஞ்சமடைந்துள்ள அகதிகளை நாடு திருப்புவது தொடர்பான ஒப்பந்தம் மியான்மர் அரசுடன் கையெழுத்தாகியுள்ளதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. இரண்டு மாதங்களில் அகதிகள் மியான்மருக்கு திரும்பும் வகையில் ஒப்பந்தம் வரையறுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

 

இந்நிலையில், கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தலைவரான போப் பிரான்சிஸ் மூன்று நாள் பயனமாக மியான்மருக்கு இன்று வருகை தந்தார். விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

ரோஹிங்கியா இன மக்களை மீள் குடியேற்றம் செய்வது தொடர்பாக அந்நாட்டின் தலைமை ஆலோசகர் ஆங் சான் சூகி மற்றும் ராணுவ தளபதி மின் ஆங் ஆகியோருடன் போப் பிரான்சிஸ் ஆலோசனை நடத்துகிறார். மியான்மர் சுற்றுப்பயணம் முடிவடைந்ததும் போப் பிரான்ஸில் வங்காளதேசம் செல்ல இருக்கிறார்.

Leave a Response