அமைச்சரின் கருத்துக்கு விவசாயிகள் கண்டனம்!

os-maniyan

சீர்காழி, கொள்ளிடம் போன்ற இடங்களை பார்வையிட்ட அமைச்சர் ஓஎஸ் மணியன், வடகிழக்கு பருவமழையால் கடைமடை பகுதியில் உள்ள நிலங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளதாக கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர்:-

இதுவரை பெய்திருக்க கூடிய மழையால் சொல்லக் கூடிய அளவிற்கு பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை என்றார்.

 

os

ஆற்றின் முகத்துவாரத்தில் மணல்திட்டுக்களை தூர்வாருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விடும் என அமைச்சர் கூறினார். சீர்காழி சுற்றுவட்டாரத்தில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதை பார்வையிட்ட அமைச்சரிடம், அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் முறையிட்டனர். கனமழை தொடர்ந்தால் பாதிப்புகள் கணக்கிடப்படும் என அமைச்சர் மணியன் தெரிவித்தார்.

Leave a Response