தொடர் பட்டினி மரணங்களின் எதிரொலி ;பள்ளி விடுமுறை நாட்களிலும் மதிய உணவு!

1443756045-0745
பள்ளி விடுமுறை நாட்களிலும் மதிய உணவு வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

டில்லியில் நேற்று நடந்த கருத்தரங்கில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின், பள்ளிக்கல்வி சிறப்பு செயலர், ரீனா ராய் கூறியதாவது: ஜார்க்கண்ட் சிறுமி, பட்டினியால் இறந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. அந்த மாணவி இறப்பதற்கு, சில நாட்களுக்கு முன், பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

விடுமுறை நாட்களிலும், மதிய உணவு அளிக்கப்பட்டிருந்தால், அவருடைய மரணத்தை தடுத்திருக்கலாம். அதனால், பள்ளி விடுமுறை காலத்தின் போதும், மதிய உணவு வழங்குவது குறித்து, மத்திய அரசு பரிசீலிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்

Leave a Response