நாங்கள் நாகரீகமான அரசியலை முன்னெடுத்துச் செல்கிறோம்!- தமிழிசை

 

MA25TAMILISAI

தமிழகத்தில் தாங்கள் நாகரீகமான அரசியலை முன்னெடுத்துச் செல்வதாக மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்கருத்து சொன்னதற்காக, தொலைபேசியில் தன்னுடைய சகோதரி, தாய் மற்றும் தோழியிடம் மிக மோசமான வார்த்தைகளில் தொடர்ந்து சிலர் பேசி வருவதாக தெரிவித்தார். இதுபற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை என்று கூறிய தமிழிசை சவுந்திரராஜன், இதனை எதிர்கொள்ள தானும், பாஜக தொண்டர்களும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Response