‘தீவிரவாதிகளை ஓடஒட விரட்டுவோம்!’ மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி சூளுரை

war 1

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், தீவிரவாதிகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய ராணுவத்தினரும் அதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி,

war2

”செல்லாத நோட்டு அறிவிப்பு மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பின் நடவடிக்கையால், தீவிரவாதிகள் கடுமையான பண தட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். அதன் காரணமாகவும், நம் ராணுவத்தின் பதிலடியாலும் காஷ்மீரை பயங்கரவாத மையமாக வைத்திருந்த அவர்கள் காஷ்மீரை விட்டு ஓட தொடங்கியிருக்கிறார்கள். ஜம்மு – காஷ்மீரில் இருந்து, தீவிரவாதிகளை விரட்டுவதே மத்திய அரசின் இலக்கு’’ என்றார்.

Leave a Response