பத்திரிகையாளர் தன்யா நடிகர் விஜயின் ‘சுறா’ படத்தை சமூகவலைதளங்களில் விமர்சித்திருந்தார். அதன் காரணமாக விஜய் ரசிகர்களால் கடும் எதிர்ப்புக்கு ஆளானார். தன்னை தரக்குறைவாக பேசிய விஜயின் ரசிகர்கள் மீது போலீஸில் புகாரும் கொடுத்தார். அதையடுத்து சம்பந்தப்பட்ட விஜய் ரசிகர்கள் மீது காவல்துறையினரின் நடவடிக்கையும் பாய்ந்தது.
பெரும் பரபரப்பான இந்த விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் .அதில் அவர்,
’’சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான். யாருடைய திரைப்படத்தையும், யாரும் விமர்சிப்பதற்கு கருத்து சுதந்திரம் உண்டு.
எக்காரணம் கொண்டும், எந்த நேரத்திலும், பெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ, விமர்சிக்க கூடாது என்பது எனது கருத்தாகும்..
அனைவரும் பெண்மையை போற்ற வேண்டும்..
யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில், சமூக இணையதளங்களில் பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்’’ என குறிப்பிட்டிருந்தார்.